Breaking

Thursday, November 18, 2021

வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வு - திண்டுக்கல் மாணவி தேசிய சாதனை!

அகில இந்திய அளவிலான வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வில் -ஐ.சி.ஏ.ஆர்., திண்டுக்கல் மாணவி அ.ஓவியா 23, தேசிய அளவில் 2ம் இடம், தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மேற்கண்ட அமைப்பு கால்நடைத் துறையில் பட்ட மேற்படிப்புக்காக இத்தேர்வை செப்.,17 ல் நடத்தியது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சாதனை படைத்த மாணவி ஓவியாவை புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பேராசிரியர்கள் பாராட்டினர்.

ஓவியா கூறுகையில், ''இளங்கலை படிப்பின்போதே முதுகலை படிக்கும் எண்ணம் இருந்ததால் இத்தேர்வுக்கென புத்தகங்களை தயார்படுத்திக் கொண்டேன். எனது ஆசிரியர்கள், சீனியர் மாணவியர் எனக்கு வழிகாட்டினர். இதற்கென தனிப்பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. இரு மாதங்களாக இரவு 12:00 மணி வரை படித்தேன். 'டிவி' பார்ப்பதை தவிர்த்து விட்டேன்,'' என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog