தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 15, 2025

Comments:0

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு



நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுடன் ஆலோசியுங்கள்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களை தொடங்க அனும​திக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, ஆர்.மகாதேவன் அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது.

தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.வில்​சன் ஆஜராகி, ”ஜவஹர் நவோதயா பள்​ளி​களில் மும்​மொழிக் கொள்கை பின்பற்றபடு​கிறது. ஆனால் தமிழக அரசு இரு​மொழி கொள்கையை சட்​ட​மாக்​கி​யுள்​ளது” என வாதிட்டார்.



அப்​போது நீதிப​தி​கள், ”ஜவஹர் நவோதயா பள்​ளி​கள் விவகாரத்தை மொழிப் பிரச்​சனை​யாக மாற்​றக் கூடாது. நாம் கூட்டாட்சி அமைப்​பில் வாழ்​கிறோம். குடியரசின் ஒரு பகு​தி​யாக தமிழகம் உள்​ளது. ஓரடி முன்​னேறி​னால், மத்​திய அரசும் ஓரடி முன்​னால் வரும்.

ஜவஹர் நவோதயா பள்​ளி​களை திணிப்​பாக பார்க்​காமல், மாநில மாணவர்​களுக்​கான வாய்ப்​பாக பார்க்க வேண்​டும். மாநில அரசின் மொழிக் கொள்கை இது​தான் என்று மத்​திய அரசிடம் கூறுங்​கள், அது குறித்து ஆலோசனை நடத்துங்கள்” என்று உத்தரவிட்​டு வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​தனர்​.


நவோதயா பள்ளிகள் - உச்சநீதிமன்றம் உத்தரவு Navodaya schools - Supreme Court order

``என் மாநிலம் என்ற மனப்பான்மையை தவிர்த்து மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தை மொழி பிரச்சினையாக்க வேண்டாம். நிலங்களை கையகப்படுத்தி தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை உருவாக்க வேண்டும்''

தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews