ஜாக்டோ ஜியோ - இன்றைய ( 14.12.2023 ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 14, 2023

Comments:0

ஜாக்டோ ஜியோ - இன்றைய ( 14.12.2023 ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்



ஜாக்டோ ஜியோ - இன்றைய ( 14.12.2023 ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: 14.12.2023

💥 15 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.

💥இன்றைய கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு வி.எஸ்.முத்துராமசாமி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் திரு அன்பரசு,தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் திரு சுரேஷ் ஆகிய மூன்று சங்க பொறுப்பாளர்கள் தலைமைதாங்கினர்.

💥இன்றைய கூட்ட முடிவில் இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.

♦️(1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை நிறைவேற்ற 28.12.2023 வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல்.

♦️(2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. 💥கோரிக்கைகள்:

🔥CPS திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.

🔥இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்

🔥சரண் விடுப்பு ஊதியம், ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

🔥காலிப் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும்.

🔥உட்பட கோரிக்கைகள்...

💥இன்றைய கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோவில் இணைந்துள்ள 25 சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்......

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews