ஜாக்டோ-ஜியோ முதல்வர் ஆதரவு மாநாடு : எதிர்ப்பு மாநாடாக அமைந்து விடக்கூடாது - எச்சரிக்கிறார் 'ஐபெட்டோ' அண்ணாமலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 31, 2026

Comments:0

ஜாக்டோ-ஜியோ முதல்வர் ஆதரவு மாநாடு : எதிர்ப்பு மாநாடாக அமைந்து விடக்கூடாது - எச்சரிக்கிறார் 'ஐபெட்டோ' அண்ணாமலை

ஜாக்டோ-ஜியோ முதல்வர் ஆதரவு மாநாடு : எதிர்ப்பு மாநாடாக அமைந்து விடக்கூடாது - எச்சரிக்கிறார் 'ஐபெட்டோ' அண்ணாமலை JACTO-GEO's conference in support of the Chief Minister: It should not turn into a protest conference – warns 'IPETTO' Annamalai.

அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் (ஐபெட்டோ) தேசியச் செயலாளர் அண்ணா மலைவெளியிட்டுள்ள அறிக்கை:

'ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில், சென்னையில் பிப்.,8ல் உரிமை மீட்பு மாநாடு நடத்தவும். இதில் முதல்வர் கலந்து கொண்டு, அரசின் உறுதிய ளிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீதம் பிடித்தம் மறுபரி சீலனை செய்வது உட்பட, முக்கிய கோரிக்கைகளை அறி விக்க செய்ய முடிவு செய்தனர். ஆனால், பேட்டியில், முதல்வர் பழைய ஓய்வூதியம் போன்றே டாப்ஸ்' கொண்டு வந்ததற் காக நன்றி அறிவிப்புக் கூட்டம் டக்கும் என்று அறிவித் துள்ளனர்.

சிபிஎஸ் சிறந்ததா? டாப்ஸ் ஓய்வூதியம் சிறந்ததா? என் றால், 10 சதவீதம் பங்களிப்பு இல்லை என்றால் எல்லோரும் கொண்டாடி மகிழும் கூட்ட மாகவே நடத்தலாம். 20 முதல் 39 ஆண்டுக்கு மேல் பணிக் காலம் உள்ளவர்கள் சிபிஎஸ் திட்டமே சிறந்தது என்று கூறும் அளவுக்கு அதிருப்தியில் உள்ளனர். 2022 செப்டம்பரில் நடந்த மாநாட்டில் முதல்வர் எதிர்பார்த்த கோரிக்கையை அறிவிக்கவில்லை என்பதால், முதல்வரின் போஸ்டரை

கிழித்துவிட்டு அவர்கள் வெளி யேறினர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை அறி வித்தவுடன், ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ அமைப் பினர் போட்டி போட்டு முதல் வரை சந்தித்து இனிப்பு பரி மாறி, சட்டசபை கூட்டம். கவர்னர் உரையிலும் இதனை தெரிவித்து மகிழ்ந்தனர்.. ஆனால், 10 அம்ச கோரிக் கையின் எந்த கோரிக்கையும் பள்ளிக்கல்வித்துறை நிறை வேற்றவில்லை. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு இன்னும் களையவில்லை. போராட்டம் தொடர்கதையாக உள்ளது. அரசாணை 243 நீக்கம்,

ஊக்க ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியருக் கான தணிக்கை தடை ஆகிய எல்லா கோரிக்கையும் 8 நாளில் முதல்வரால் மாநாட்டில் அறிவிக்க முடியுமா? இத்தனை பிரச்னைக்கும் உரியவர்கள் மாநாட்டுப் பந்தலில் இருப் பார்கள் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் நடைபெற்ற கூச்சல் குழப்பங்களை விட இன்னும் அதிகமாக, இதயத்தால் தாங் கிக் கொள்ள முடியாத, முழக் கங்களைக்கூட எழுப்புவதற் கும் தயாராக இருப்பார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews