DPI வளாகத்தில் 10-ம் வகுப்பு புத்தகம் இல்லை: மாணவர், பெற்றோர் ஏமாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2024

Comments:0

DPI வளாகத்தில் 10-ம் வகுப்பு புத்தகம் இல்லை: மாணவர், பெற்றோர் ஏமாற்றம்

டிபிஐ வளாகத்தில் 10-ம் வகுப்பு புத்தகம் இல்லை: மாணவர், பெற்றோர் ஏமாற்றம்

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ வளாகம்) உள்ள பாடநூல் கழக தலைமை அலுவலகத்தின் விற்பனை கவுன்ட்டர்கள், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டர், திருவான்மியூரில் வேளச்சேரி - தரமணி 100 அடி சாலையில் உள்ள பாடநூல் கழக கிடங்கில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டுக்கான 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ தமிழ் பாடப் புத்தகங்கள், 8,9,11-ம் வகுப்புகளுக்கான மாநில பாடத் திட்ட தமிழ் புத்தகங்கள், 10, 12-ம் வகுப்பு பாட நூல்களும் நேற்று முதல் மேற்கண்ட இடங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என பாடநூல் கழகம் அறிவித்திருந்தது.


ஆனால், டிபிஐ வளாகத்தில் 10-ம் வகுப்பின் ஆங்கில பாட நூல் மட்டுமே நேற்று விற்கப்பட்டது. இதனால், மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘10-ம் வகுப்பு அனைத்து புத்தகங்களும் ஓரிரு நாளில் விற்பனைக்கு கிடைக்கும்’’ என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews