ஐ.ஏ.எஸ். கனவுடன் பள்ளிக்கு சைக்கிள் பயணம்: சாதித்த 10ஆம் வகுப்பு மாணவி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 05, 2020

Comments:0

ஐ.ஏ.எஸ். கனவுடன் பள்ளிக்கு சைக்கிள் பயணம்: சாதித்த 10ஆம் வகுப்பு மாணவி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐ.ஏ.எஸ். ஆகும் கனவுடன் நாள்தோறும் பள்ளிக்கு 24 கி.மீ. சைக்கிளில் சென்று வந்த 10ஆம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியுள்ளது. அதில், அம்மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள அஜ்னோல் கிராமத்தை சேர்ந்த ரோஷினி எனும் மாணவி 98.75 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அத்துடன், மத்தியப்பிரதேச இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10ஆம் வகுப்பு தேர்வுகளின் தகுதி பட்டியலில் மாநில அளவில் 8ஆவது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தையும், விவசாயியுமான புருஷோத்தம் கூறுகையில், “எனது மகள் ரோஷானி 8ஆம் வகுப்பு வரை வேறு ஒரு பள்ளியில் படித்தார். அங்கு போக்குவரத்து வசதி இருந்தது. ஆனால், 9ஆம் வகுப்பில் எங்களது கிராமத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் சேர்த்தேன். அங்கு சென்று வர போக்குவரத்து வசதி கிடையாது. எனவே, பல நாட்கள் பள்ளிக்கு சைக்கிளிலேயே எனது மகள் சென்று வந்துள்ளார்” என்றார் நெகிழ்ச்சியாக. அஜ்னோல் கிராமத்தில் வேறு யாரும் இதுபோன்று இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றதில்லை என்பதால் அக்கிராம மக்கள் அனைவரும் ரோஷினியை நினைத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர் என தெரிவிக்கும் புருஷோத்தம், தனது மகளின் இந்த சாதனை தன்னை பெருமை படுத்தியுள்ளதாகவும், விரைவில் அவருக்கு போக்குவரத்து வசதிக்கு மாற்று ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார். பள்ளிக்கு சைக்கிள் பயணம் தொடர்பான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட மாணவி ரோஷினி, “சைக்கிளில் செல்வது மிகவும் கடினமாக இருக்கும். எத்தனை நாட்கள் அதுபோன்று சைக்கிளில் சென்றேன் என தெரியவில்லை. எப்படியும் வருடத்திற்கு 60லிருந்து 70 முறையாவது சைக்கிளில் சென்று வந்திருப்பேன். எனது தந்தைக்கு நேரம் கிடைக்கும் போது அவரது இரு சக்கர வாகனத்தில் என்னை பள்ளிக்கு அழைத்து செல்வார்” என்றார். பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் சுமார் 7 முதல் 8 மணி நேரம் வரை படித்ததாக கூறும் ரோஷினி, குடிமை பணிகள் தேர்வில் தேர்ச்சியடைந்து ஐ.ஏ.எஸ். ஆவதே தனது கனவு என்றும் தெரிவித்துள்ளார். ரோஷினியின் பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவியின் சாதனை, மனஉறுதியைப் பாராட்டியுள்ளார். ஐ.ஏ.எஸ். ஆக வாழ்த்துக்கள் ரோஷினி... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews