Breaking

Monday, June 08, 2026

CBSE குழப்பத்தால் மாணவர்கள் பரிதவிப்பு - பிளஸ் 2 குரூப்பில் பாடங்களை தேர்வு செய்வதில் சிக்கல்



சிபிஎஸ்இ குழப்பத்தால் மாணவர்கள் பரிதவிப்பு - பிளஸ் 2 குரூப்பில் பாடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் - Students are suffering due to CBSE confusion - Problem in choosing subjects in Plus 2 group

சிபிஎஸ்இ இந்த ஆண்டு புதி​தாக அறி​முகப்​படுத்​திய ஆன்​லைன் மதிப்​பீட்டு முறை மற்​றும் விடைத்​தாள் நகல் குளறுபடியால் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு​திய மாணவர்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். மேலும், தவறான பாடத் தேர்வு முறை​யால் மாணவர்​களின் உயர்​கல்வி வாய்ப்​பும் பறி​போகும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை நாடு முழு​வதும் 17.68 லட்சத்துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் எழு​தினர். தேர்வு முடிவு​கள் மே 13-ம் தேதி வெளி​யாகின. 85.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்​றனர். கடந்த ஆண்​டை​விட இந்த ஆண்டு தேர்ச்சி 3.19 சதவீதம் குறைந்​தது. விடைத்​தாள் மதிப்​பீட்​டில்

இந்த முறை ‘ஆன்​-ஸ்​கிரீன் மார்க்​கிங்’ (OSM) எனப்​படும் ஆன்​லைன் மதிப்​பீட்டு முறை அறி​முகம் செய்​யப்​பட்​டது. அதாவது, மாணவர்​களின் விடைத்​தாள்​கள் அனைத்​தும் ஸ்கேன் செய்​யப்​பட்​டு, ஆன்லைனிலேயே ஆசிரியர்​கள் திருத்​தப் பணியை மேற்கொண்டனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்​ததற்​கும் ஆன்​லைன் மதிப்​பீட்டு முறை​தான் காரணம் என்ற குற்​றச்​சாட்​டும் பரவலாக எழுந்​தது. எதிர்​பார்த்த மதிப்​பெண் கிடைக்​காமல் நாடு முழு​வதும் ஆயிரக்​கணக்​கான மாணவர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

இது ஒரு​புறம் இருக்க, இன்​னொரு புறம் சிபிஎஸ்இ வழங்​கி​யுள்ள முக்​கிய பாடங்​கள், கூடு​தல் பாடங்​கள் பட்​டியலை தேர்வு செய்வதில் சிக்​கல் உரு​வாகி​யுள்​ளது. பள்ளி நிர்​வாகங்​கள் இதை மாற்றி தேர்வு செய்​வ​தால், மாணவர்​கள் பாதிக்​கப்​படு​கின்​றனர். குறிப்​பாக, விவ​சா​யம், தோட்​டக்​கலை, வனவியல் உள்​ளிட்ட தொழிற்​கல்வி படிப்​பு​களில் மாணவர்​கள் சேர முடி​யாத சூழல் ஏற்பட்​டுள்​ளது. தமிழ்​நாடு வேளாண் பல்​கலைக்​கழகம் மேற்​கண்ட படிப்​பு​களுக்கு கணிதம், இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் பாடங்​கள் அல்​லது இயற்​பியல், வேதி​யியல், தாவர​வியல், விலங்​கியல் பாடங்​கள் அல்​லது இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல், கணித அறி​வியல், உயிரி தொழில்​நுட்​பம் உள்​ளிட்ட சில பாடங்​களை தகு​தி​யாக வைத்​துள்​ளது.

ஆனால், சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில், முக்​கிய பாடங்​கள், கூடு​தல் பாடங்​கள் என பிரிக்​கப்​பட்​டுள்​ள​தால், பாடங்​களை தேர்வு செய்​வ​தில் பள்​ளி​களுக்கு குழப்​பம் ஏற்​பட்​டு, சில பள்​ளி​கள், இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் பாடங்​களு​டன் கணினி அறி​வியல் உள்​ளிட்ட முக்​கிய பாடங்​களை தேர்வு செய்​வதற்கு பதில், கூடு​தல் பாட வரிசை​யில் உள்ள உடற்​கல்வி பாடத்தை தேர்வு செய்​கின்​றன. கூடு​தல் பாட வரிசை​யில் கணினி அறி​வியல் பாடத்தை தேர்வு செய்து மாணவர்​களுக்கு கல்வி கற்​பிக்​கின்​றன.

தேர்வு முடிந்து மதிப்​பெண் சான்​றிதழ் பெறும்​போது​தான் மாணவர்​களுக்கு இந்த குழப்​பம் தெரிய​வரு​கிறது. மதிப்​பெண் சான்​றிதழில் முக்​கிய பாடங்​களில் உடற்​கல்​வி​யும், கூடு​தல் பாடப்​பிரி​வில் கணினி அறி​வியல் பாட​மும் இடம்​பெறும் நிலை​யில், வேளாண் பல்​கலைக்​கழகம் அதை ஏற்​ப​தில்​லை. இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் ஆகிய முதன்மை பாடங்​களு​டன் கணினி அறி​வியல் பாடம் இடம்​பெறாததே அதற்கு காரணம். 4-வது பாட​மான கணினி அறி​வியல், முதன்மை பாடப் பிரி​வில் இடம்​பெறாத​தால் அதை கட்​-ஆஃப் மதிப்​பெண்​ணில் இணைக்க வேளாண் பல்​கலைக்​கழகம் தயக்​கம் காட்​டு​கிறது. கணினி அறி​வியலோ, கணித பாடமோ முதன்மை பாடப் பிரி​வில் இருந்​தால் எந்த பிரச்​சினை​யும் எழாது.

எனவே, வரும் ஆண்​டில், முதன்மை பாடம் மற்​றும் கூடு​தல் பாடங்​களை தேர்வு செய்​வ​தில் ஏற்​படும் குழப்​பங்​களை தடுக்க வேண்​டும். பள்ளி நிர்​வாகங்​கள் தவறாக பாடங்​களை தேர்வு செய்​த​தால் பா​திக்​கப்​பட்ட மாணவர்​களுக்கு அவர்​கள் விரும்​பும் பாடங்​களை படிக்க உதவும் வகை​யிலும் சிபிஎஸ்​இ நிர்​வாகம்​ நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​ என்​று மாணவர்​கள்​, பெற்​றோர்​ கோரிக்​கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog