Breaking

Wednesday, July 08, 2026

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் - 4.38 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்

The Tamil Nadu government is expanding its breakfast scheme to include students from classes 6 to 8 in government-aided schools.

Approximately 4.38 lakh students are expected to benefit from this expanded scheme.

The initiative was announced following a review of social welfare projects led by officials in Chennai

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் - 4.38 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்



6 முதல் 8-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம்

சென்னை, ஜூலை 7: தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலை யில், இத்திட்டத்தில் 4.38 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற வுள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது.


சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறையின் திட்டங்கள் மற் றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தக்கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப் பில்,முதல்வரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயி லும் மாணவ, மாணவிகளுக்கு பெரியார் ஈவெரா பிறந்த நாளான செப். 17-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட் டிருந்தது. இதையடுத்து இதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுவரு கிறது.

இந்த நிலையில், இத்திட்டத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் 4.38 லட்சம் மாணவர்கள் பயனடைய வுள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது. 4.38 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்

இதுகுறித்து அதிகாரிகள் கூறு கையில், தமிழகத்தில் அரசு, அரசு

உதவிபெறும் பள்ளிகளில் 1-5 வகுப் புகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் சுடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட் டுள்ளது. தற்போதைய நிலவரப் படி இத்திட்டத்தின் கீழ் 23 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா கிச்சடி அல்லது சோள காய்கறி கிச் சடி, காய்கறி சேமியா, கோதுமை ரவா, ரவா உப்புமா, ரவா பொங்கல் அல்லது வெண் பொங்கல், சேமியா கிச்சடி, கேசரி என திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு உணவு வழங்கப் வகை பட்டு வருகிறது. இதற்கிடைய இத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்ப டவுள்ளது.

இதன்மூ லம் கிராமப்புறங்களில் உள்ள 5,811 அரசுப்பள்ளி கள், 712 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 3,5/614 மாணவர்கள்; நகர்ப்புறங்களில் 1,160 அரசுப் பள்ளிகள், 607 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 1,33,269 மாணவர்கள் என மொத் தம் 4,38,883 மாணவர்கள் பயன்பெ றவுள்ளனர்.

இதில் மாணவர்களின் எண் ணிக்கை 2,24,146-ஆகவும், மாண விகளின் எண்ணிக்கை 2,14,737 ஆகவும் உள்ளது. இத்திட்டத்தில் புதிய வகை உணவுகளை சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog