சட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பம் தொடக்கம்!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளில் 3,024 இடங்கள் உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12)முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி பெற்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல், கட்ஆப் மதிப்பெண் விவரங்களை சட்டப் பல்கலைக்கழகம் பின்னர் வெளியிடப்படும்.
Search This Blog
Thursday, May 15, 2025
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.