Breaking

Saturday, August 20, 2022

துணை வேந்தர் நியமனம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறார் கவர்னர்

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வகை செய்யும் மசோதா ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசு நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது. துணை வேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசிடம் கவர்னர் கலந்தோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதா கொணடுவரப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog