Breaking

Wednesday, April 14, 2021

கொரோனாவுக்கு பள்ளி ஆசிரியை பலி!

தென்மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் திருநெல்வேலியில் ஆசிரியை உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் தாமிரபரணி ஆற்றில் கூட்டமாக குளிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'கொரோனா கால கதாநாயகர்கள்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி - முதல் பரிசாக கையடக்க கணினி
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 220 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதில் திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் 102 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 38 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.கூட்டப்புளி மீனவர் கிராம பள்ளி ஆசிரியை, 58, 56 வயது இரு ஆண்கள் என 3 பேர் கொரோனாவால் பலியாகினர். தற்போது 983 பேர் சிகிச்சையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நேற்று 113 பேர் பாதிக்கப்பட்டனர். 11 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். தற்போது 449 பேர் சிகிச்சையில் உள்ளனர். துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 82 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 20 பேர் குணமாகினர். தற்போது 712 பேர் சிகிச்சையில் உள்ளனர். தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் திருநெல்வேலி தாமிரபரணியில் கூட்டமாக குளிக்க தடைவிதித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.
அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க உத்தரவு: தமிழக அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog