அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு கொரோனா! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 14, 2021

Comments:0

அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு கொரோனா!

கடம்பத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானது, சக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
SBI-நிலையான வைப்புத்தொகை மீது -கடன் பெறுவது எப்படி ?
கடம்பத்துார் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் இடைநிலை என, இருபெண் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.தற்போது, கடம்பத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 170க்கும் மேற்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், பிளஸ் 2 தேர்வை வேறு பள்ளிக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை பெற்றோரிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் மலர்க்கொடி கூறியதாவது: அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்திய அறைகள் மற்றும் பள்ளி வளாகத்தை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பள்ளியில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், பிளஸ் 2 தேர்வு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews