நீட் தேர்வுக்கு எதிரான 6 மாநில அமைச்சர்களின் சீராய்வு மனு வழக்கு நாளை விசாரணை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

நீட் தேர்வுக்கு எதிரான 6 மாநில அமைச்சர்களின் சீராய்வு மனு வழக்கு நாளை விசாரணை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அமைச்சர்கள் தொடர்ந்த சீராய்வு மனு மீது நாளை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துகிறது.
நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி புதுச்சேரி, மேற்கு வங்கம் உட்பட 7 மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 11 மாணவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 17-ந் தேதி தள்ளுபடி செய்தது.
இதனிடையே புதுச்சேரி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. அதில் தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் 7 மாநிலங்களும் வலியுறுத்தி இருந்தன. நீட் தேர்வுக்கு எதிரான 6 மாநில அமைச்சர்களின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. செப்டம்பர் 13ல் நடைபெற உள்ள நீட் தேர்வை எதிர்த்து பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட 6 மாநில அமைச்சர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கோரி, மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஹால் டிக்கெட் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் தேர்வு நடத்துவதற்கு பா.ஜ.க ஆளாத மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் தேர்வை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்கள் சார்பில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை நடத்த அனுமதி அளித்து ஆகஸ்ட் 17 ல் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews