பஞ்சாப் மாநிலத்தில் ஆன்லைன் வகுப்பு இருப்பதாகக் கூறி பெற்றோரின் மொபைல் போனை பயன்படுத்தி வந்த மகன் ஒருவர் பப்ஜி விளையாட்டை அப்கிரேட் செய்ய மட்டும் 16 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் 17 வயது சிறுவன் ஒருவர் தனது தாயிடம் தினமும் ஆன்லைன் வகுப்புகள் இருப்பதாகக் கூறி பல மணி நேரம் ஸ்மார்போனில் நேரம் செலவழித்து வந்துள்ளார். வங்கி ஊழியரான தந்தைக்கு தனது வங்கிக் கணக்கில் இருந்து மாத ஸ்டேட்மண்ட் வந்துள்ளது. அதில் 16 லட்சம் ரூபாய் பணத்தை பப்ஜி கேமை அப்கிரேட் செய்ய சிறுவன் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ந்த தந்தை, மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது, தினமும் பல மணி நேரம் ஆன்லைன் வகுப்பு இருப்பதாக பொய்க் கூறி பப்ஜி விளையாடியதாக தெரிவித்துள்ளார்.
பப்ஜி கேம்
அதோடு கேமை அப்கிரேட் செய்ய வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பயப்படுத்தியதாகவும், தனது நண்பர்கள் பலருக்கும் கேம் அப்கிரேட் செய்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார். சிறுவனுக்கு தந்தையின் வங்கிக் கணக்கு பற்றிய அனைத்து தகவல்களும் தெரிந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. மகனின் பதிலை அடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற தந்தைக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.பிளே ஸ்டோரில் அல்லது கேம்களை அப்கிரேட் செய்ய பயன்படுத்திய பணத்தை திரும்பப் பெற முடியாது என்றும், சிறுவனை இனி இதுபோன்ற தவறுகளை செய்யாமல் பார்த்துக் கொள்ளும் படியும் காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளனர்.
கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பப்ஜி விளையாட்டை நாள் முழுவதும் விளையாடி வந்த 22 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு அந்த விளையாட்டால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டி இருந்தனர். பப்ஜி விளையாட்டால் உலகம் முழுவதும் சிறுவர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த விளையாட்டுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமலும் சிலர் தவித்து வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகள் இருந்தாலும் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.