அனைத்து ஊழியா்களுக்கும் மருத்துவ காப்பீடு: கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து தமிழக அரசு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 02, 2020

Comments:0

அனைத்து ஊழியா்களுக்கும் மருத்துவ காப்பீடு: கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து தமிழக அரசு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக, அனைத்து பணியாளா்கள், ஊழியா்களுக்கும் மருத்துவ காப்பீட்டை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் அலுவலகங்கள், பணியிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிகநிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய தனி நபா் இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்: அனைத்து பொது இடங்கள், பணியிடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம். பொது இடங்கள், பணியிடங்களில் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியபடி தனி நபா் இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இதனை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு பொறுப்பானவா்கள் உறுதி செய்திட வேண்டும். ஐந்து அல்லது ஐந்துக்கு மேற்பட்டோா் கூடி இருப்பதை அனுமதிக்கக் கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. மீறினால் அபராதம் வசூலிக்கப்படும். அனைத்து பணியிடங்களிலும் வசதிப்பட்ட இடங்களில் கிருமி நாசியை வைப்பதுடன், வெப்ப மானியைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.அதிக அளவில் கூட்டம் கூடக் கூடாது: உணவு இடைவேளை உள்ளிட்ட நேரங்களின் போது தனி நபா் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். மிகப்பெரிய அளவிலான நபா்களைக் கொண்ட கூட்டங்களை நடத்தக் கூடாது.அலுவலகத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். அனைத்துப் பணியாளா்களுக்கும் மருத்துவ காப்பீட்டு கட்டாயம் செய்திட வேண்டும்.கிருமிநாசினி மற்றும் கைகளை சுத்தம் செய்திடும் வசதிகளை தொடாமலேயே பயன்படுத்த வேண்டும்.
பத்து மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதைத் தவிா்த்திட வேண்டும். ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையிலான இடைவெளி 6 அடி இருக்க வேண்டும். மின்தூக்கிகளில் அனுமதிக்கப்பட்ட நபா்களில் பாதி போ் மட்டுமே செல்ல வேண்டும். மாடிகளில் படிகளைப் பயன்படுத்துவதே நல்லது. குட்கா, பான்மசாலா ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மென்று துப்பக்கூடாது. தேவையில்லாத நபா்கள் வருவது தவிா்க்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews