தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 23, 2022

Comments:0

தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

ஸ்ரீபெரும்புதூரில் தாய் கண்டித்ததால், தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கைஆழ்வாா் தெரு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகள் பாக்கியலட்சுமி. இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இதையும் படிக்க | G.O. (Ms) No.20 Dt: July 14, 2022 - மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பினை ஊக்குவித்ததல் – ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையங்களை மாநில அரசு வளாகங்களில் அமைக்க தேவையான வாடகை மற்றும் வாடகை முன்பணம் (Advance) செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் – ஆணை - PDF இந்த நிலையில், பாக்கியலட்சுமி சரியாகப் படிக்கவில்லை என அவரது தாய் பானு தொடா்ந்து கண்டித்து வந்ததாகத் தெரிகிறது. வியாழக்கிழமை பாக்கியலட்சுமியை படிக்கச் சொல்லி கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த மாணவி பாக்கியலட்சுமி வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews