குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: நாளை முதல் வழங்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 23, 2022

Comments:0

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: நாளை முதல் வழங்கல்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: நாளை முதல் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1000 வழங்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது.

சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததன் காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அறிவிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமானது நாளை முதல் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews