Breaking

Friday, July 09, 2021

அரசாணை (டி)எண்.153 ,நாள் 25.06.2021 - உயர்கல்வித் துறை: பல்கலைக்கழகங்கள் - சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் பதவி உயர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக வெளிவந்த செய்திகள், வரப்பெற்ற புகார்கள் குறித்து ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைத்து ஆணை வெளியீடு

சேலம் பெரியார், மதுரை காமராஜர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனம், பதவி உயர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகார்.

விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைத்து உயர்கல்வித்துறை ஆணை.

3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு.

அரசாணை (டி)எண்.153 ,நாள் 25.06.2021

உயர்கல்வித் துறை: பல்கலைக்கழகங்கள் - சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் பதவி உயர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக வெளிவந்த செய்திகள், வரப்பெற்ற புகார்கள் குறித்து ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைத்து-ஆணை வெளியீடு
சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் ஆசிரியர் பதவி உயர்வில் நடந்த முறைகேட்டை விசாரிக்க குழு அமைத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உயர்கல்வித்துறை துணை செயலாளர் சங்கீதா, அரசு இணை செயலாளர்கள் இளங்கோ, ஹென்றிதாஸ் குழுவில் உள்ளனர். பதவி உயர்வில் நடந்த முறைகேடு குறித்து குழு விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் பெரியார், மதுரை காமராஜர், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பதவி உயர்வில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை குழு அமைத்தது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog