இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 - பிரதமர் மோடி அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 09, 2021

Comments:0

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 - பிரதமர் மோடி அறிவிப்பு!

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 வழங்கும் திட்டம்.. பிரதமர் மோடி அறிவிப்பு! .
இளம் எழுத்தாளர்களுக்கான புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 30 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகள் இந்தியா மற்றும் அதன் பண்பாட்டை உலக அளவில் அறியும்படி இலக்கியப் படைப்புகளாக மாற்றுவதற்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 75 இளம் படைப்பாளிகளுக்கு 6 மாத காலத்திற்கு மாதம் தோறும் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதற்கு விண்ணப்பிக்க இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 75 இளம் எழுத்தாளர்கள் இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews