Breaking

Wednesday, June 09, 2021

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.4286/இ2.இ3/2021 நாள் .06.2021
(நகல்) அனுப்பப்படுகிறது. இணைப்பில் காணும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் 2020 2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து வகை பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சிப் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக சார்ந்த பள்ளித் தலைமையாசிர்களுக்கு வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக அனுப்பிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog