தனியார் பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 01, 2021

1 Comments

தனியார் பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

தனியார் பள்ளி ஆசிரியர்களும், பள்ளிக்கு வரவேண்டாம். அவர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும்படி, பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
மூக்கின் வழியே எலுமிச்சை சாறு - ஆசிரியர் பலி!
தமிழகத்தில், கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. பிளஸ் 2 மாணவர்களும், வீட்டில் இருந்தபடி தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டு, இந்த மாதம் முடிவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், இன்று முதல் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில், புதிய கல்வி ஆண்டுக்கு தயாராவதற்கு, ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டியிருக்கும் என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும், இதேபோன்ற அறிவுறுத்தல் வழங்கப் பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்களைப் போல, தனியார் பள்ளிகளும் தங்கள் ஆசிரியர்களை, வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கலாம். தேவைப்படும் நாட்களில் மட்டும் வரவழைத்துக் கொள்ளலாம். மற்ற நாட்களில் விடுமுறை அளிக்கவும், அவர்களை பள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்த வேண்டாம் என, ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஐயா தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஒன்றை ஆண்டுகள் விடமுறை தான் பின்னர் ஒன்றை ஆண்டுகளாக எங்களுக்கு வருமானம் இல்லை. .. இதில் ஐயா நீங்கள் விடுமுறை வீட்டில் இருந்து வேலை என்கிறிர்கள... .மிக சிறப்பு

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews