Breaking

Monday, March 15, 2021

10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – NIOS அறிவிப்பு

தேசிய திறந்தநிலை பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடந்த நிலையில், தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கான செட் (CET) தேர்வுகள் – அமைச்சர் அறிவிப்பு!! தேசிய திறந்த நிலை பள்ளி:
தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் (NIOS) இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியமாகும். ஊரகப் பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. தேர்வுகள்:
தேசிய திறந்தநிலை பள்ளியின் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடந்தது. தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வின் முடிவுகளை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளதாக அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பை தடுக்க பள்ளி மாணவ, மாணவிகள் தீவிரமாக கண்காணிப்பு: சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தின் பொதுத்தேர்வுகளை எழுதியவர்கள் அதிகாரபூர்வ இணைய தளமான https://results.nios.ac.in சென்று தங்கள் தேர்வு எண்ணை உள்ளிட்டு தேர்வின் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog