Breaking

Monday, March 15, 2021

நீட் தேர்வுகள் ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!!

நடப்பு ஆண்டில் ஜேஇஇ தேர்வுகளை போன்று, நீட் தேர்வுகளும் ஆண்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் நடத்த மத்திய அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை அரசு நிராகரித்து உள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் நீட் தேர்வுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு கையெழுத்து போட்ட ஆசிரியர் - ஆய்வில் கண்டுபிடித்த தேர்தல் அலுவலர்.
நீட் தேர்வுகள்:
தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டுமே இளங்கலை மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்படுவார்கள். நீட் தேர்வு உலகத்திலேயே நடக்கும் மிகப்பெரிய நுழைவுத்தேர்வாகும். ஆண்டு தோறும் 16 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். முந்தைய நிலவரம்:
இதற்கு முன்னர் பிற தனியார் நிறுவனங்கள் தங்களின் தனிப்பட்ட மருத்துவ நுழைவு தேர்வுகளை இரண்டு முறை நடத்தின. ஆனால் தற்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே இந்தியாவில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற இளங்கலை படிப்புகளுக்கு மருத்துவ நுழைவு தேர்வை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு கையெழுத்து போட்ட ஆசிரியர் - ஆய்வில் கண்டுபிடித்த தேர்தல் அலுவலர்.
ஜேஇஇ தேர்வு:
ஜேஇஇ தேர்வுகள் நடப்பாண்டில் இருந்து ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்பட உள்ளது. அதேபோல், மாணவர்கள் நீட் தேர்விற்கான வாய்ப்புகளையும் அதிகரித்து வழங்க கோரிக்கை வைத்திருந்தனர். நீட் தேர்வு குறித்த ஆலோசனைகளை நடத்த மத்திய கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கினார். மத்திய அரசு அறிவிப்பு:
மக்களவையில் பாஜக எம்.பி. ஒருவர் நீட் தேர்வு தொடர்பான கேள்விகளை கேட்டார். அதற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வுகள் ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog