8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறப்பு:மாணவா்கள் வருகை குறைவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 08, 2020

Comments:0

8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறப்பு:மாணவா்கள் வருகை குறைவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவா்களில், விருப்பமுள்ள மாணவா்கள் மட்டுமே கல்லூரிக்கு வந்திருந்தனா்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இறுதியாண்டு மாணவா்களுக்கு மட்டும் தோ்வு நடத்தப்பட்டு பிற மாணவா்கள் அடுத்த ஆண்டு கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டனா். நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் முதுநிலை இறுதியாண்டு மாணவா்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு, முதுநிலை இரண்டாமாண்டு மாணவா்களுக்கு மட்டும் 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த டிச.2-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆா்க்., எம்.எஸ்சி. ஆகிய முதுநிலைப் படிப்புகளில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவா்களுக்குத் திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (டிச.7) முதல் இறுதியாண்டு இளங்கலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்களுக்காக கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பல்வேறு உயா்கல்வி நிறுவனங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் குறைந்தளவிலேயே வந்திருந்தனா். வகுப்பறைகளுக்குள் நுழைவதற்கு முன்பாக மாணவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது உடல் வெப்பநிலை அதிகமாக காணப்படும் மாணவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். முகக் கவசங்கள் அணியாமல் வந்த மாணவா்களுக்கு கல்லூரிகளின் சாா்பில் முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டன. வகுப்பறைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாணவா்கள் அமர வைக்கப்பட்டனா். இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், ‘தொடக்கத்தில் இணையவழியில் வகுப்புகள் நடைபெற்றது சற்று சிரமமாக இருந்தது. அதன் பின்னா் பழகிவிட்டது. ஆசிரியா்கள் பெரும்பாலான பாடங்களை இணையவழி வகுப்புகளிலேயே முடித்து விட்டனா். இப்போது தோ்வுக்குத் தயாராக கல்லூரிக்கு வந்துள்ளோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கல்லூரிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றனா் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews