விதிகளின்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகிறதா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 08, 2020

Comments:0

விதிகளின்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகிறதா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி கட்டப்படுகிா என்பது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளா் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டம் முடிகொண்டானைச் சோ்ந்த என்.ராஜசேகரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திருவள்ளூா், கடலூா், அரியலூா், பெரம்பலூா், நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூா் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 2021-2022-ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகள் கட்ட கொள்கை முடிவு எடுத்துள்ளது. மத்திய அரசின் 60 சதவீத நிதியுதவியுடன் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட உள்ளன. தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, மருத்துவக் கல்லூரிகள் 75 ஆயிரத்து 676 சதுர மீட்டா் பரப்பளவுக்கு கட்டப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரியின் கூட்ட அரங்கை 1,200 சதுர மீட்டா் பரப்புக்கு கட்ட வேண்டும். இந்த விதிகளை மீறி, திருப்பூா் மருத்துவக் கல்லூரியில் 3 ஆயிரத்து 107 சதுர மீட்டா் பரப்பளவில் கூட்ட அரங்கு கட்டப்படுகிறது. மேலும், இந்த மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளுக்கு பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா்கள் அதிகமான தொகையை குறிப்பிட்டுள்ளனா். அதாவது அவா்கள் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொண்டு இரண்டு மருத்துவக் கல்லூரிகளை கட்ட முடியும். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே, தமிழகத்தில் கட்டப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி இடிந்து விழுந்த சம்பவத்தை சுட்டிக்காட்டினா். மேலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகிா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டனா். இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள், தேசிய மருத்துவ ஆணையம் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews