அரசு பள்ளி மாணவர்கள் 51 பேர் இலவச பயிற்சியில் 'நீட்' தேர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 27, 2020

Comments:0

அரசு பள்ளி மாணவர்கள் 51 பேர் இலவச பயிற்சியில் 'நீட்' தேர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி கல்வித்துறை வழங்கிய இலவச, 'நீட்' பயிற்சியால், போரூர் அரசு பள்ளி மாணவி, 365 மதிப்பெண் பெற்றுள்ளார். 'நீட்' தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில், 51 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், 'இ - பாக்ஸ்' என்ற நிறுவனம் வாயிலாக, இலவசமாக நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வில், அரசு பள்ளி மாணவ - மாணவியர், 1,633 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அவர்களில், 90 பேர், 300க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 220க்கும் மேற்பட்டோர், அரசின் இலவச நீட் பயிற்சி பெற்றனர். அவர்களில், அரசு பள்ளி மாணவர்கள், 51 பேர் உட்பட, 92 பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்று உள்ளனர்.இவர்களில், போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ருதி, 720க்கு, 365 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், ஆதி திராவிடர் பிரிவில், அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவியரில் ஒருவர்.மேலும், கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவர் கிஷோர் குமார், 201; அம்மையார் குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவர் ருத்ரமூர்த்தி, 163 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், நீட் பயிற்சிக்கு தனிக்குழு அமைக்கப்பட்டது. அதில், ஆசிரியை அனிதா; ஆசிரியர்கள், ஸ்ரீதர், ஆனந்த், சீனிவாசராவ், சவுந்தரபாண்டி, சுல்தான், கோமதி வினாயகம் ஆகியோர் இடம் பெற்று, 'வாட்ஸ் ஆப், ஆன்லைன்' வகுப்புகள் வாயிலாக, பயிற்சி அளித்துள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews