அரசியல் பின்னணியில் 'அரியர்' மாணவர்கள் அண்ணா பல்கலைக்கு மறைமுக நெருக்கடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

அரசியல் பின்னணியில் 'அரியர்' மாணவர்கள் அண்ணா பல்கலைக்கு மறைமுக நெருக்கடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரியர் மாணவர்களில், 48 சதவீதம் பேர், அரசியல் மற்றும் அதிகார மையங்களில் உள்ளவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா ஊரடங்கு காரணமாக, நாடு முழுவதும், பெரும்பாலான மாநிலங்களில், பள்ளி, கல்லுாரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படாமல், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. முந்தைய தேர்வுகளில் பெயிலாகி, அரியர் பாட தேர்வுகளுக்கு விண்ணப்பித்தோருக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு கட்டணம் செலுத்தியோருக்கு தேர்ச்சி வழங்கப்படும் என்றும், தமிழக அரசு அறிவித்தது.அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் சார்பில், அண்ணா பல்கலைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரியர் வைத்துள்ள மாணவர்களின் பட்டியலை, அண்ணா பல்கலை அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர்.அதில், 52 சதவீத மாணவர்களுக்கு, ஒன்றிரண்டு பாடங்களில் மட்டுமே, அரியர் உள்ளது தெரியவந்துள்ளது.ஆனால், 10க்கும் மேற்பட்ட பாடங்கள் அரியர் வைத்துள்ளவர்களில், 48 சதவீதம் பேர், வி.ஐ.பி.,க்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது. அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் குடும்பங்களை சேர்ந்தவர்கள், 'ஆல் பாஸ்' முடிவுக்கு காத்திருப்பதாக கூறப்படுகிறது.அரசின் அறிவிப்பை எப்படியும் அமல்படுத்த வேண்டும் என, அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு, சிலர் நெருக்கடி கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனையை பெற்ற பின் முடிவெடுக்க, அண்ணா பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews