தமிழகத்தில் நல்லாசிரியர் விருது மாவட்டங்களில் விழா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

தமிழகத்தில் நல்லாசிரியர் விருது மாவட்டங்களில் விழா

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில், மாநில அளவிலான நல்லாசிரியர் விருதுக்கு, 375 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, வரும், 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் விழாக்களில், விருது வழங்கப்பட உள்ளது. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5, நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய, மாநில அளவில், ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, தேசிய அளவிலான விருது, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு கிடைத்தது.மாநில அளவிலான விருதுக்கு, 375 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரிலான நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும், மாநில அளவில், சென்னையில் விழா நடத்தப்பட்டு, ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, மாநில அளவிலான விருது விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.மாவட்ட தலைநகரங்களில் விழா நடத்தப்பட்டு, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், கலெக்டர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் வழியே, 7ம் தேதி விருது வழங்கப்பட உள்ளது.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews