தலைமையாசிரியர் கொரோனா தொற்றால் மரணம்: மாணவர்கள் அஞ்சலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 20, 2020

தலைமையாசிரியர் கொரோனா தொற்றால் மரணம்: மாணவர்கள் அஞ்சலி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை மணலிபுதுநகர்‌, பகுதி ஒன்றியில்‌, அரசினர்‌ உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி, 1989 ல்‌ துவங்கப்பட்டது. அன்றிலிருந்து, 1997 வரை, ஒன்பது ஆண்டுகள்‌, ராமனுஜம்‌, பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றினர்‌. இந்த பள்ளியின்‌ முதல்‌ தலைமை அசிரியரும்‌ இவரே. சில மாதங்களுக்கு முன்‌, நடைபெற்ற இப்பள்ளியின்‌ முன்னாள்‌ மாணவர்களின்‌ சந்திப்பு நிகழ்ச்சியில்‌, இவர்‌ பங்கேற்றிருந்தார்‌. இந்நிலையில்‌, கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்‌, கடந்த, 8ம்‌ தேதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்‌. அவரை, நினைவு கூறும்‌ வகையில்‌, முன்னாள்‌ மாணவர்கள்‌ பங்கேற்று, பள்ளி வளாகத்தில்‌, அஞ்‌சலி செலுத்தும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரித்து வைத்திருந்த அவரது திருவுருவ படத்திற்கு, முன்னாள்‌ மாணவர்கள்‌, மலர்‌துவி மரியாதை செலுத்தினர்‌. பின்‌, மவுன அஞ்சலியும்‌ நடைபெற்றது. மாணவர்கள்‌ அஞ்சலி தலைமை அசிரியராக ஒன்புது ஆண்டுகள்‌ பணியாற்றியதை நினைவு கூறும்‌ வகையில்‌, பள்ளி வளாகத்தில்‌, ஒன்பது மரக்கன்றுகளை, முன்னாள்‌ மாணவர்கள்‌ நட்டனர்‌. முப்பது ஆண்டுகளுக்கு முன்‌ படித்த மாணவர்கள்‌, தொற்றால்‌ மறைந்த தலைமை ஆசிரியரை நினைவு கூறும்‌ வகையில்‌, பள்ளி வளாகத்‌தில்‌ கூடி, அஞ்சலி செலுத்‌திய நிகழ்வு, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews