கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்க கோரி வழக்கு தொடர முடிவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 18, 2020

Comments:0

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்க கோரி வழக்கு தொடர முடிவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி, யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர் சங்கம் சார்பாக, 'ஆன்லைன்' கலந்தாய்வுக் கூட்டத்தை, மாநில பொதுச் செயலர், குணசேகரன் துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் தங்கராஜ் பேசியதாவது:தமிழகத்தில், யு.ஜி.சி., தகுதி பெற்று, 4,084 கவுரவ விரிவுரையாளர்கள், அரசு கல்லுாரிகளில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு, கொரோனா பேரிடரிலும் ஏப்., - ஜூலை வரை சம்பளம் வழங்கவில்லை. குடும்ப ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதே பிரச்னை பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ஏற்பட்டபோது, அங்கு நீதிமன்றத்தை நாடி, தற்போது, சம வேலைக்கு சம ஊதியம் அடிப்படையில், கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளம் பெறுகின்றனர்.அதுபோல், தமிழகத்திலும் வழக்கு தொடர, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து, சட்ட உதவிகள் பெற்று, வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews