ஜூலை 27ல் நடைபெறும் +2 மறுதேர்வுக்கு மாணவர்களிடம் ஆர்வமில்லை!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 17, 2020

Comments:0

ஜூலை 27ல் நடைபெறும் +2 மறுதேர்வுக்கு மாணவர்களிடம் ஆர்வமில்லை!!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு எழுத முடியாத 12ம் வகுப்பு மாணவர்களில் சொற்ப அளவே மறுதேர்வுக்கு விருப்பம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியன்று நடைபெற்ற வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளை தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 482 மாணவர்கள் எழுத இயலவில்லை. தொடர்ந்து தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தேர்வு எழுதாத மாணவர்களுக்காக மறுத்தேர்வு ஜூன் மாதத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது, பின்னர் ஜூலை 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய கடந்த 13ம் தேதி தொடங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவு பெறுகிறது. இதை தொடர்ந்து, 34 ஆயிரத்து 482 மாணவர்களில் தற்போது 250 பேர் மட்டுமே ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிலும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்களில் 105 பேர் மட்டுமே பள்ளி மாணவர்களாவர். மற்ற மாணவர்கள் கொரோனா அச்சம் காரணத்தினால் தேர்வு எழுத முடியவில்லை என கூறப்படுகிறது. தேர்வு எழுத வாய்ப்பு கொடுத்தும் மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews