பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 17, 2020

Comments:0

பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து, வழக்கு அக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது தனியார் பள்ளிகள் முதற்கட்டமாக 40% கல்விக் கட்டணத்தை வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வசூலித்துக்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கரோனா பொதுமுடக்க காலத்தில் தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் பதிலளித்த தமிழக அரசு, தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது தற்போது 25% கல்வி கட்டணம், பள்ளிகள் திறந்த பிறகு 25% மற்றும் பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு பிறகு 25% என மூன்று தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளது. ஆனால், தற்போது பள்ளிகள் திறப்பு எப்போது? எனத் தெரியாத சூழ்நிலையில், நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்து, தனியார் பள்ளிகள் முதற்கட்டமாக 40% கல்வி கட்டணத்தை வருகிற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வசூலித்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு அடுத்த 35% கல்வி கட்டணத்தைப் பெறலாம் என்றும் அடுத்த 8 மாதங்களுக்குள் முழுவதுமாக கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது. அதேபோல, முந்தைய கல்வியாண்டில் கட்டண பாக்கி இருந்தால் பெற்றோர்கள் வருகிற ஆகஸ்ட் 30-க்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, தனியார் பள்ளிகள் கோரிக்கைக்கு ஏற்ப, அவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து, வழக்கு அக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண நிர்ணய குழு உடனே நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் 40 சதவீதம் கல்விக் கட்டணம் வசூல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மேலும் 35 சதவீதம் கல்விக்கட்டணத்தை வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவிகித்தை வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. *கல்வி கட்டணத்தை வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவை எதிர்த்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சங்கங்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. *இந்த வழக்குகள் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், “அரசு உதவி பெறாத பள்ளிகளில் இந்த ஆண்டு கல்வி கட்டணத்தில் 75 சதவிகிதத்தை மூன்று தவணைகளில் வசூலிக்க அனுமதிக்கலாம் என தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.தற்போது 25%, பள்ளிகள் திறக்கும்போது 25%, அதற்கு அடுத்த மூன்றுமாதம் கழித்து 25% என வசூலிக்க அனுமதிக்க உள்ளோம். இந்த கல்வியாண்டு கட்டணம் எவ்வளவு என்பதை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணய குழு முடிவெடுக்கும்”.என தெரிவிக்கப்பட்டது.
*கல்வி நிறுவனங்கள் தரப்பு வாதத்தில், “இந்த ஆண்டு ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என இடைக்கால உத்தரவில் பிறப்பிக்க வேண்டும். பாட புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் என மாணவர்களின் நலன் கருதி கேட்கிறோம். அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கோம்”. எனத் தெரிவிக்கப்பட்டது. *அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவிகித்தை வசூல் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். *2 மாதங்களுக்கு பிறகு 35 சதவிகித கல்வி கட்டணத்தை வசூலித்துக்கொள்ளலாம் எனவும் கட்டண நிர்ணய குழு ஆகஸ்ட்டில் இருந்து 8 மாதங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். *மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு பொருந்தும் என்று கூறிய நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் அக் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews