மாணவர்களுக்கு சத்தான உணவு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 14, 2020

Comments:0

மாணவர்களுக்கு சத்தான உணவு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மதிய உணவு திட்டத்தில் பயனடையும் குழந்தைகளுக்கு, சத்தான உணவுகளை வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ஆர்.சுதா தாக்கல் செய்த மனு:ஊரடங்கு உத்தரவால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பது இல்லை. இந்த நேரத்தில், அவர்களுக்கு சத்தான உணவு கிடைக்க வேண்டும்.அதனால், குழந்தைகளின் வீடுகளுக்கே சென்றோ அல்லது ரேஷன் கடைகளில் சத்தான உணவுப் பொருள் வழங்கவோ ஏற்பாடு செய்யலாம். சென்னையில், 200 இடங்கள் உட்பட, தமிழகம் முழுதும், 407 இடங்களில், 'அம்மா' உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களிலும், சைவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு முட்டை வழங்க பரிசீலிக்கலாம். இதனால், பொது மக்களுக்கும் சத்தான உணவு கிடைக்கும். எனவே, மதிய உணவு திட்டத்தில் பயனாளிகளாக உள்ள மாணவர்களுக்கு, சத்தான உணவு வழங்கவும், 'அம்மா' உணவகத்தில் முட்டை உள்ளிட்ட சத்துணவு வழங்கவும், திட்டம் வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 20ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்க ஏதாவது திட்டம் உள்ளதா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் ஆர்.சுதா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெற முடியாத சூழல் இருப்பதாகும் அவர் கூறியுள்ளார். எனவே குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை வழங்குவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ஊட்டச்சத்து குறைவினால் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார். அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அரசாங்க வழங்கறிஞரும் ஆஜரானார். தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews