10ம் வகுப்பு தேர்வு, பள்ளிகள் திறப்பு: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 09, 2020

Comments:0

10ம் வகுப்பு தேர்வு, பள்ளிகள் திறப்பு: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., இன்று(ஜூன் 9) ஆலோசனை நடத்த உள்ளார்.வரும், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்புதேர்வு நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்து வருகிறது. நோய் பரவல் உள்ள நிலையில், தேர்வு நடத்தக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பகல், 12:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இரு துறை உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வுவழக்கு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும்,முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும், பள்ளிகள் திறப்பது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த, வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்..? தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு..? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், தமிழக அரசு கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக நாளை மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்கிறார். இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பள்ளி திறப்பு குறித்து முதல்வர் நாளை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை (செவ்வாய்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தொடக்கத்தில் ஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் ஜூலை 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர். இதைத் தொடர்ந்து, பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றி தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணையை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றியும், பள்ளிகள் திறப்பது பற்றியும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews