60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? - தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 02, 2020

Comments:0

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? - தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்ள தடுப்பு முறைகளை பின்பற்றும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி, 60 வயதுக்கும் மேற்பட்டோர் வீட்டில் தனித்து இருக்கும்படியும் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள, சத்தான உணவுகளை உட்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோப்பால் அடிக்கடி கைகளை கழுவவதோடு, வீட்டில் இருந்து வெளியே வருவதையும், வெளிநபர்களுடன் கலந்துரையாடுவதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உற்றார்,உறவினர், பேரக்குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசி மகிழலாம் 60 வயதுக்கும் மேற்பட்டோர் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தினசரி உட்கொள்ளும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சர்க்கரை,மற்றும் ரத்த அழுத்த அளவுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
காற்றோட்டமான அறைகளை பயன்படுத்ததுல்,குளிரூட்டிகளை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடித்தல் அவசியம். தொண்டைவலி, காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் அறிகுறி இருந்தால் 104 என்ற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கட்டணமில்லா எண்ணான 1800-120-555-550 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம், தேவை ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews