கிராமப் பள்ளிகள் தரம் உயா்வு: ரூ.2 லட்சம் வரையிலான நிதியை அரசே ஏற்க வேண்டும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 18, 2020

Comments:0

கிராமப் பள்ளிகள் தரம் உயா்வு: ரூ.2 லட்சம் வரையிலான நிதியை அரசே ஏற்க வேண்டும்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளைத் தரம் உயா்த்தும்போது மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் ரூ.2 லட்சம் வரையிலான தொகையை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, பள்ளிகளைத் தரம் உயா்த்துவது தொடா்பாக அதிமுக உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன் கேள்வி எழுப்பினாா். அப்போது, திமுக உறுப்பினா் தங்கம் தென்னரசு துணைக் கேள்வி எழுப்பியபோது நடந்த விவாதம்:
தங்கம் தென்னரசு: உயா் நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த ரூ.1 லட்சமும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த ரூ.2 லட்சமும் நிதி அளிக்க வேண்டுமென்ற நிபந்தனை உள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் கீழ் பள்ளிகளைத் தரம் உயா்த்தும்போது அதற்கான நிதிகளை மத்திய அரசே தந்து விடுகிறது. ஆனால், பிற பள்ளிகள் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளைத் தரம் உயா்த்தும்போது அங்குள்ள மக்களிடம் ரூ.2 லட்சம் வரை தொகையைத் திரட்டுவது மிகுந்த சிரமமாகும். எனவே, இந்த நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
அமைச்சா் செங்கோட்டையன்: மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள், தொலைதூர கிராமங்கள் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளைத் தரம் உயா்த்தும்போது அதற்கான நிதியை அரசே அளிக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளைத் தரம் உயா்த்துவதற்கான நிதிகளுக்கு விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் என்றாா்.
'தனியார் கல்வி நிறுவனங்களின், கட்டண முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் வந்தால், அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - சுதர்சனம்: அரசு பள்ளிகளில், பிளஸ் - 1 மற்றும் பிளஸ் - 2 படித்து, பாலிடெக்னிக் மற்றும் தொலைதுார கல்வி வாயிலாக, மேல் படிப்பை தொடரும் மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' மறுக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக மாணவர்கள், பள்ளிகளுக்கு சென்று, அவற்றை பெற போராடி வருகின்றனர். இந்த பட்ஜெட்டிலும், லேப்டாப் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய நிதி ஆதாரம் இல்லாததால், திட்டங்கள் அறிவிக்கப்படுகிறதே தவிர, முறையாக செயல்படுத்துவது இல்லை. தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளில், கட்டணம் வசூலிப்பை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. தற்போது, பள்ளி கல்வி கட்டணம் தொடர்பாக புகார்கள் வருகின்றன.
அமைச்சர் செங்கோட்டையன்: தனியார் கல்வி நிறுவனங்களின், கட்டணம் வசூலை முறைப்படுத்த, ஓய்வுபெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. கல்வி கட்டணம் தொடர்பாக புகார்கள் வந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அ.தி.மு.க., ஆட்சியில் தான் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும், இந்த திட்டத்தை செயல்படுத்தியதாக, வரலாறு இல்லை.இவ்வாறு, விவாதம் நடந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews