தமிழகத்திலேயே முதல்முறையாக மாணவர் காவலர் குழுமம் துவக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 08, 2020

Comments:0

தமிழகத்திலேயே முதல்முறையாக மாணவர் காவலர் குழுமம் துவக்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'போக்சோ சட்டம் மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழகத்திலேயே முதல்முறையாக, புதுக்கோட்டையில், மாணவ - மாணவியர் காவலர் குழுமம் துவங்கப்பட்டுள்ளது,'' என, எஸ்.பி., அருண் சக்திகுமார் தெரிவித்தார். பாலியல் குற்றங்களில் இருந்து, சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில், பள்ளி, மாணவ - மாணவியர் காவல் குழுமம், நேற்று துவங்கப்பட்டு உள்ளது. எஸ்.பி., அருண்சக்திகுமார் கூறியதாவது:தமிழகத்திலேயே முதல் முறையாக, புதுக்கோட்டையில், மாணவ - மாணவியர் காவல் குழுமம் துவங்கப்பட்டுள்ளது.
தற்போது, மாணவ - மாணவியர், 130 பேருடன் துவங்கப்பட்டுள்ளது.மேலும், இந்த குழுமம், மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். மாணவ - மாணவியரிடையே, போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews