அரசு தொடக்க பள்ளியை தத்தெடுத்த போலீசார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 08, 2020

Comments:0

அரசு தொடக்க பள்ளியை தத்தெடுத்த போலீசார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வியாசர்பாடி மெகிசின்புரம் பகுதியில் சென்னை மாநகராட்சி துவக்கப் பள்ளி கடந்த 1935ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அடிப்படை வசதியின்றி காணப்பட்ட இந்த பள்ளியை வியாசர்பாடி போலீசார் தத்தெடுத்து, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். அதன்படி, வகுப்பறைகளுக்கு புதிதாக வர்ணங்கள் பூசி பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி தரப்பட்டுள்ளன. மேலும் சுத்தமான குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
சீரமைக்கப்பட்ட பள்ளியை மாணவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் தினகரன் கலந்துகொண்டார். அவர், மாணவர்களிடையே பேசுகையில், படிப்பின் முக்கியத்துவம் மற்றும் அப்துல் கலாமை நினைவு கூர்ந்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பள்ளியை சுற்றிப் பார்த்து, மரக்கன்றுகளை நட்டார். மாணவ மாணவிக்கு பரிசு பொருட்களையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி கமிஷனர்கள் ஜெயசிங், சுரேந்தர், முத்துக்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஆப்ரகாம் குரூஸ், சீனிவாசன், மனோன்மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews