3 ஆசிரியை மீது போக்சோ வழக்குப்பதிவு: எதிர்த்து மற்ற மாணவர்கள், பெற்றோர் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 17, 2019

Comments:0

3 ஆசிரியை மீது போக்சோ வழக்குப்பதிவு: எதிர்த்து மற்ற மாணவர்கள், பெற்றோர் போராட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கோவையில் சோதனை என்ற பெயரில் மாணவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்திய பள்ளி முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்து மற்ற மாணவர்கள், பெற்றோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பீகாரைச் சேர்ந்த விமானப்படை வீரரின் இரு மகன்கள் படித்து வருகின்றனர். ஒரு மாணவர் பிளஸ்-1 வகுப்பும், அவரது தம்பி 9ம் வகுப்பும் படிக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பள்ளி ஆசிரியர் இந்த மாணவர்களை கண்டித்தார். இதனால், அந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து ஆசிரியரைத் தாக்கினர். அப்போது இருந்தே மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் என மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளிக்கு செல்போன் கொண்டுவந்ததாக கூறி, சோதனை என்ற பெயரில் பள்ளியின் முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் இந்த மாணவர்களின் ஆடைகளை களைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதில் இருவரும் காயமடைந்ததாகவும் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் மாணவர்களின் தந்தை சூலூர் போலீசில் புகார் செய்தார். முதலில் கண்டுகொள்ளாத போலீசார் கடந்த 15ம் தேதி மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறவே, பள்ளியின் முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது கொலை மிரட்டல், போக்சோ சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்த தகவல் பள்ளி மாணவர்களிடையே பரவியது. பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது பெற்றோரும் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சமரசம் செய்தனர். ஆசிரியர்கள் மீது புகார் அளித்த இரு மாணவர்களும் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களின் வருகையால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சக மாணவர்கள் அவர்களை தாக்கிவிடக்கூடாது என்பதாலும், அந்த 2 மாணவர்கள் ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்ற பயத்திலும் அந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாதுகாப்பு அளித்தனர். இதனிடையே பிளஸ் 1 படிக்கும் மாணவர் மீது சக மாணவர்கள் 86 பேர் டி.எஸ்பி. பாலமுருகனிடம் புகார் அளித்துள்ளனர். அதில் அந்த மாணவர் தங்களை வன்கொடுமை செய்வதாக கூறி உள்ளனர். இதையடுத்து அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நேற்று மாலை அவரது தம்பியையும் அழைத்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆறாம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், தங்களது ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, நீதி வழங்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேந்திரிய பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியர்கள் அருணா, தமிழரசி, திவ்யா உள்ளிட்டோர் மீது அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருவர், தங்கள் மீது தனிப்பட்ட முறையில் வன்மம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பிட்ட இரண்டு மாணவர்கள் மீது ஏற்கனவே பல புகார்கள் மாணவர்கள் தரப்பில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews