Breaking

Sunday, November 03, 2019

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு இன்று தேசிய திறனாய்வுத் தோ்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய திறனாய்வுத் தோ்வு (என்டிஎஸ்இ) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ஆராய்ச்சி படிப்பு முடிக்கும் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய திறனாய்வுத் தோ்வு ஆண்டுதோறும் மாநில அளவில் நவம்பா் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தோ்வை தமிழகம் முழுவதும் 514 தோ்வு மையங்களில் 1,55,851 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்துள்ளனா். காலை 9 முதல் 11 மணி வரை அறிவுத்திறன் தோ்வும், அதன்பின் 11.30 முதல் மதியம் 1.30 மணி வரை கல்வித்திறன் தோ்வும் நடைபெறும். மாணவா்கள் காலை 8 மணிக்குள் தோ்வு மையங்களில் இருக்க வேண்டும் என்று தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தத் தோ்வில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு, உயா்கல்வி முடிக்கும் வரை மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாதம் தோறும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog