97 சதவீதம்! பிளஸ் 1 தேர்வில் உடுமலை கல்வி மாவட்டம் தேர்ச்சி...3 அரசு பள்ளிகள் சதமடித்து சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 09, 2019

97 சதவீதம்! பிளஸ் 1 தேர்வில் உடுமலை கல்வி மாவட்டம் தேர்ச்சி...3 அரசு பள்ளிகள் சதமடித்து சாதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பிளஸ் 1 பொதுத்தேர்வில், உடுமலை கல்வி மாவட்டம், 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகள் 'சென்டம்' வாங்கியுள்ளன.
மேல்நிலைக்கல்வியில் பிளஸ் 1 தேர்வு, கடந்தாண்டு முதல் பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இத்தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் கணக்கிடப்படுவதில்லை. இருப்பினும், இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே, உயர்கல்விக்கு தகுதி பெற முடியும்.உடுமலை கல்வி மாவட்டத்தில், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளும், 20 தனியார் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.மார்ச், 2019 பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் தேர்வுத்துறை இயக்குனரகத்தால் நேற்று வெளியிடப்பட்டன. உடுமலை கல்வி மாவட்டத்தில், 3,914 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 3,790 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இக்கல்வி மாவட்டம் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.அரசுப்பள்ளிகளில் பெரியவாளவாடி, தேவனுார்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் புங்கமுத்துார் காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளியும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.தேர்ச்சி சதவீதம்ஜல்லிபட்டி 93, ராஜேந்திரா ரோடு மேல்நிலைப்பள்ளி 87, அரசு ஆண்கள் மேல்நிலை 88, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலை 97, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி 95, உடுக்கம்பாளையம் 97, எலையமுத்துார் 89, குடிமங்கலம் 95, பூளவாடி 94, ராமச்சந்திராபுரம் 85, பெதப்பம்பட்டி 97, மடத்துக்குளம் 99, காரத்தொழுவு 93, கொமரலிங்கம் 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. உடுமலை எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி 98, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி.,மேல்நிலை 98, எஸ்.வி.ஜி.,மேல்நிலை 97, கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி 96 தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளன.சதமடித்த தனியார் பள்ளிகள்தனியார் பள்ளிகளில், உடுமலை ஆக்ஸ்போர்டு, ஆர்.கே.ஆர்.,, கொழுமம் ஓம்சக்தி, சிருஷ்டி விகாஸ் அகாடமி மெட்ரிக், ஆர்.கே.ஆர்.,ஞானோதயா, சீனிவாசா மெட்ரிக், உடுமலை ஆர்.ஜி.எம்.,மெட்ரிக், ஜி.வி.ஜி.,மெட்ரிக், ஸ்டெல்லா மேரீஸ் மெட்ரிக், அன்னை அபிராமி மெட்ரிக், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி.,மெட்ரிக், பெதப்பம்பட்டி என்.வி.,மெட்ரிக், பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்.,மெட்ரிக் உள்ளிட்ட 13 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்ச்சி முடிவுகளின் படி, கடந்தாண்டில், நான்கு அரசு பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன. நடப்பாண்டில் மூன்று பள்ளிகள் மட்டுமே நுாறு சதவீதம் பெற்றன. இருப்பினும், அரசு பள்ளிகளில், கடந்தாண்டு தேர்ச்சி சதவீதத்திலிருந்து, நடப்பாண்டு சதவீதம் அதிகரித்துள்ளது.பிளஸ் 2 பாடத்திட்டம் எளிதாக இருக்கும்தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 1 பொதுத்தேர்வு, பிளஸ் 2 தேர்வுக்கான அடிப்படையாக உள்ளது. இரண்டாண்டுகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருப்பது, பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்வதற்கு, ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது.மேலும், நடப்பாண்டில், பிளஸ் 2 பாடத்திட்டமும் மாற்றப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வை எதிர்கொண்ட மாணவர்களுக்கு, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் எளிமையாகவே இருக்கும்.புதிய பாடத்திட்டத்தை, 'ப்ளூபிரிண்ட்', மற்றும் எந்த முன்மாதிரியும் இல்லாமல், பொதுத்தேர்வை எதிர்கொண்டு, தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளின் முயற்சி மட்டுமின்றி, மாணவர்களின் ஒத்துழைப்பும் இதில் உள்ளது.இவ்வாறு, கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews