பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம்: இடம் மாறியதால் குழந்தைகள் குஷி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 15, 2019

பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம்: இடம் மாறியதால் குழந்தைகள் குஷி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையத்தை பள்ளி வளாகத்துக்கு இடம் மாற்றியதால், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடுமலை ஒன்றியம், போடிபட்டி ஊராட்சிக்கான, அங்கன்வாடி மையம், அப்பகுதியிலுள்ள சமுதாய நலக்கூட வளாகத்தில் இருந்தது. குடியிருப்புகளை விட்டு, தொலைதுாரத்தில் மையம் இருந்ததால், மையத்துக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.சமுதாய நலக்கூட வளாகத்தில் அமைந்திருப்பதால், பலரும், வளாகத்தை பயன்படுத்தும் நிலை இருந்தது. விசேஷ நாட்களில் நலக்கூடத்தை பயன்படுத்துவோர், அங்கன்வாடி மையத்தையும் அசுத்தப்படுத்துவது, மையத்தின் கழிப்பறைகளை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அடிப்படையான கழிப்பறை வசதியும் இல்லை. இதனால், பெற்றோரும் அதிருப்தியடைந்தனர்.
அங்கன்வாடி மையத்தை போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்றி அமைக்க வேண்டுமென, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. சமுதாய நலக்கூடத்தில் மையம் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பள்ளி வளாகத்தில் அதனை மாற்றுவதற்கும், &'தினமலர்&', நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதன் விளைவாக, தற்போது, பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையம் பள்ளியில் செயல்படுவதால், பெற்றோரும் நிம்மதியோடு குழந்தைகளை அழைத்து வருகின்றனர். குழந்தைகளின் எண்ணிக்கையும், 16 ஆக அதிகரித்துள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews