வாசிப்பை மேம்படுத்த டிஜிட்டல் தரத்தில் ஜொலிக்கும் நூலகம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 15, 2019

வாசிப்பை மேம்படுத்த டிஜிட்டல் தரத்தில் ஜொலிக்கும் நூலகம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
உடுமலை, முதற்கிளை நுாலகம் டிஜிட்டல்மயமாவதுடன், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு பொருட்களுடன் மழலையர் பிரிவும் துவக்கப்படுவது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ், உடுமலை, முதற்கிளை நுாலகம் செயல்படுகிறது.
இங்கு, ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன. நாள்தோறும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் பயன்படுத்துகின்றனர்.நுாலக வாசகர் வட்டம், குழந்தைகள் வாசகர் வட்டம், மற்றும் போட்டித்தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் நுால் வெளியீட்டு விழாக்கள் என பல்வேறு செயல்பாடுகள் நடக்கிறது. வாசகர்களின் ஆர்வத்தால், &'டிஜிட்டல்&' நுாலகமாக மாற்றுவதற்கும், நுாலக வாசகர் வட்டத்தினர், கல்வியாளர்கள், நுாலகர்கள் பலரும் நுாலகத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். இந்நிலையில், மாநில அளவில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில், டிஜிட்டல் நுாலகம் அமைப்பதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டு, நிதிஒதுக்கீடும் செய்தது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாவட்ட மைய நுாலகம், புதிய முறைக்கு மாற்றப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை முதற்கிளை நுாலகத்தின் செயல்பாடுகளால், தாலுகா அளவிலான இந்நுாலகம் &'டிஜிட்டல்&'மயமாக மாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு நுாலகத்துக்கும், தலா 50 லட்சரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கிளை நுாலகத்தில் இணைய வசதிக்கென, 15 கம்ப்யூட்டர்கள், இதில், பார்வையற்ற, காது கேளாதவர்கள் பயன்படுத்திக்கொள்ள மூன்று மற்றும் குழந்தைகளுக்கெனவும் தனியாக ஒரு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் புத்தகங்கள், அவற்றை, கம்ப்யூட்டர் மூலம் தேடிக்கொள்ளும் வசதி, பார்வை குறைபாடுள்ளவர்களுக்கான &'பிரெய்லி முறை&', உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.இதில், தற்போது, கூடுதலாக, நான்கு மற்றும் ஐந்து வயது குழந்தைகளும் நுாலகத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் வைத்து பயன்படுத்தவும், தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்துமிடம் தற்போது படிப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. மேல் தளத்தில் இணைய வசதிக்கான அறையாக மாற்றப்பட்டு, தரைத்தளம் முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான அறைகளும், கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்து, தயார் நிலையில் உள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்களும், அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நுாலகம், டிஜிட்டல் மயமாக மாறுவதன் அடையாளமாக, புதிய வண்ணங்களில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பணிகள் தீவிரமாக நடப்பதால், மக்களும் ஆர்வத்தோடு, உடுமலை டிஜிட்டல் நுாலகம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் நாளுக்காக காத்திருக்கின்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews