Breaking

Friday, April 08, 2022

மாத ஊதியம் பெற்று வழங்கிட வேண்டுதல் சார்பாக ஆணையர் அவர்களுக்கு கோரிக்கை

மதிப்பிற்குரிய ஆணையர் அவர்களுக்கு வணக்கம்

பொருள்: மாத ஊதியம் பெற்று வழங்கிட வேண்டுதல் - சார்பாக,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வில் பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இதுநாள் வரை ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை.

அவர்களது பணியிடம் IFHRMS மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். எனவே கால தாமதம் ஆகிறது என்றும் அதற்கான சரியான வழிகாட்டுதல்கள் ஏதுமின்றி ஆசிரியர்கள் ஊதியம் பெற இயலாத சூழல் நிலவுகிறது. மேலும் சில பள்ளிளுக்கு காலிப்பணியிடங்களுக்கு சென்றவர்களுக்கும் அந்த பணியிடம் பள்ளியின் அளவை பதிவேட்டில் (Scale Register)-ல் இருந்தும் IFHRM-ல் இல்லை என்பதால் ஊதியம் பெற்று வழங்கப்படாமல் உள்ளது. எனவே இவைசார்ந்து உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் பெற ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog