Breaking

Friday, January 20, 2023

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் Press Release - நாள்: 20.01.2023

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் Press Release - நாள்: 20.01.2023

மறிப்புமிகு பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு

இனிய வணக்கங்கள்,

1. இன்றைய நாளில், பள்ளிக்வய்வித்துறையில், சுமார் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதைப்போன்றே முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

2 எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் ஏராளமான மானாவச் செல்வங்கள் அரகப் பள்ளிகளில் வந்து சேர்ந்துள்ளனர்.

3. நிலைமை இவ்வாறு இருக்கையில், கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களை அக்கல்வி ஆண்டு முடியும்வரை அதாவது மே மாதம் வரை, பணியில் நீட்டிக்கலாம் என்று நடைமுறையில் இருந்து வரும் ஆணையை நடைமுறைப்படுத்தாபல் உதாசீனப்படுத்தி ஏழை எளிய மாணவர்களின் கல்வி பெறும் வாய்ப்பை பறிமுதல் செய்வது நியாயம்தானா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

4. ஆகவே அருள்கூர்ந்து இப்பிரச்சனையில் தாங்கள் உடனடி கவனம் செலுத்தி, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், தொடர்ந்து அக்கல்வி ஆண்டு முடியும் வரை மாணவர்களின் நலன் கருதி, பணியாற்றலாம் என்ற ஆணையை உடனடியாக பிறப்பிக்குமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog