சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கு பணி - வரும் 28, மார்ச் 1ல் சென்னையில் நேர்காணல்: தமிழக அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 22, 2023

Comments:0

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கு பணி - வரும் 28, மார்ச் 1ல் சென்னையில் நேர்காணல்: தமிழக அரசு அறிவிப்பு

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கு பணி வரும் 28, மார்ச் 1ல் சென்னையில் நேர்காணல்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்கள் பணிக்கு சென்னையில் வருகிற 28, மார்ச் 1ல் நேர்காணல் நடைபெறும் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந. மகேஸ்வரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் வருகிற 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையலாம். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் (9566239685, 6379179200) (044-22505886, 044-22502267) வாயிலாக அறிந்து கொள்ளலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews