நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 18, 2022

Comments:0

நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது

நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி, ஹரியானாவில் ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது

நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி மற்றும் ஹரியானாவில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல லட்சம் பணம் கைமாற்றப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வ்ருகிறது

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது. டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள பல மையங்களில் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது.

இதையும் படிக்க | இன்று விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர்

இதையடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தேர்வர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்த தேர்வு எழுதிய 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்குப் பதிலாக தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக விண்ணப்பதாரர்களின் புகைப்படங்களை கலந்து மார்பிங் செய்து பயன்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சுஷில் ரஞ்சன், பிரிஜ் மோகன் சிங், பப்பு, உமா சங்கர் குப்தா, நிதி, கிருஷ்ண சங்கர் யோகி, சன்னி ரஞ்சன், ரகுநந்தன், ஜீபு லால், ஹேமேந்திரா மற்றும் பாரத் சிங் ஆகியோர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews