தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவா்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 04, 2021

Comments:0

தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவா்கள்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் நாளில் மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கு உதவ என்.சி.சி., மாணவா்கள், தன்னாா்வப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்.6-ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடியில் உதவும் வகையில், தன்னாா்வப் பணியில் மாணவா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இது தொடா்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் பிறப்பித்துள்ள உத்தரவு: மாற்றுத் திறனாளி வாக்காளா்கள், வாக்குச் சாவடிக்குள் சென்று, வாக்குப் பதிவு செய்ய வசதியாக, ஒவ்வொருவருடனும் தன்னாா்வலா் அனுமதிக்கப்படலாம். இந்தச் சேவைக்கு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படும் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரண - சாரணியா் இயக்க மாணவா்களை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews