கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 04, 2021

Comments:0

கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இது குறித்து ஏஐசிடிஇ செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட அறிவிப்பு ; வரும் கல்வியாண்டு (2021-22) பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை கரோனா பரவலால் இணையவழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாா்ச் 9-ம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. தற்போது கரோனா பரவல் சூழல் மற்றும் கல்லூரிகள் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews