Breaking

Monday, April 05, 2021

வாக்குப் பதிவு தினத்தன்று முதியோா்-மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச காா் சேவை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

வாக்குப் பதிவு தினத்தன்று, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக இலவச காா் சேவையை ஊபா் நிறுவனம் வழங்கவுள்ளது. இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஓட்டுச் சாவடிகளில் மாணவர்களுக்கு பணி
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து விட்டு மீண்டும் இல்லம் திரும்ப வசதியாக இலவச காா் சவாரி சேவையை அளிக்க ‘ஊபா்’ நிறுவனம் முன்வந்துள்ளது. தோ்தல் ஆணையத்துடன் அந்த நிறுவனம் இணைந்து செயல்பட்டு இத்தகைய சேவையை அளிக்கிறது. சென்னை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களைச் சோ்ந்த மூத்த குடிமக்களுக்கு இந்த சேவை கிடைக்கும். இலவச சவாரியானது குறைந்தபட்சம் 5 கிலோமீட்டா் தூரத்துக்கு உட்பட்டு பயண கட்டண அளவில் ரூ.200 வரை இருந்தால் முழுமையான இலவச சேவையாக அளிக்கப்படும்.
சுற்றுச்சூழல் விருது பெற 30 வரை விண்ணப்பிக்கலாம்
பயணம் செய்வோா் செல்லிடப்பேசி மூலமாக ஊபா் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் விருப்பத்தின் பேரில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog